Skip to main content

உடல் சோர்வை போக்கும் பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை


பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை

எல்லா பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிரித்வி என்ற பூமி முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். சமஸ்கிருதத்தில் பிருத்வி என்ற சொல்லுக்கு பூமி என்று பொருள்படும்,

செய்முறை :

மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.

தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.

காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.

ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.

பலன்கள் :

எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அழகிய தோற்றத்தையும் தருகிறது, ஜீரண சக்தியை கூட்டுகிறது.

பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.

எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.

அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது

மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது

நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது. தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்

சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்

பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.

பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

இந்த பிருத்வி முத்திரை புத்தரின் திருவுருவ சிலைகளில் பார்க்க இயலும்.

என்றென்றும் உயிர்நேயத்துடன்….

வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை,
சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம் 
+919629188853, +917810040103

valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com


Comments

Post a Comment

Popular posts from this blog

சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகள்

  சைவ உணவு பழக்கம் குறைந்த கொழுப்பு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), அமெரிக்கர்களில் 3 பேரில் 1 பேருக்கு அதிக கொழுப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு நபரின் இரத்தத்தில் அதிகப்படியான ‘கெட்ட’ எல்.டி.எல் கொழுப்பு இருக்கும்போது, ​​அது இரத்த நாளங்களின் உட்புறத்துடன் இணைகிறது மற்றும் பிளேக் உருவாக்க கட்டமைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு இது ஒரு பெரிய ஆபத்து காரணி. ஒரு சைவ உணவு நேரடியாக இரத்த லிப்பிட் அளவைக் குறைக்கிறது அல்லது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உங்கள் கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழி, ‘கெட்ட’ வகையான கொழுப்பு-நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது. இந்த வகையான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளில் வெண்ணெய், இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்- சைவ உணவு உண்பவர்கள் தவிர்க்கும் அனைத்தும். குறைந்த இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம்- அல்லது உயர் இரத்த அழுத்தம்- என்பது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் சக்தி நாள்பட்ட அளவில் அதிகமாக இருக்கும்போத...

உடல் சூட்டை தணித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் வருண முத்திரை

வருண முத்திரை பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய   முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை.   இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில்   காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல்   தடுத்துக்கொள்ள முடியும். பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற   பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை   எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க   வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைக...