Skip to main content

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும் பங்கஜ முத்திரை

பங்கஜ முத்திரை

விரிப்பில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். பிறகு, நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பதுபோன்று… அதாவது, இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும் (படத்தைப் பார்க்கவும்).

இனி, கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு மெள்ள இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்.இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும்.
தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.
இந்த முத்திரை பயிற்சி குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.
முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும் அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை செய்யலாம், இங்கு 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
பலன்கள் :
பங்கஜ முத்திரையும் நம் மனதை மலரச் செய்யும். நாம் உலக போகங்களில் உழன்றாலும் ஒட்டியும் ஒட்டாமல் வாழும் வல்லமையைத் தரும். இதுவே ஞானத்தின் முதல் நிலை.
மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். முகப் பொலிவும் தேகத்தில் தேஜஸும் ஏற்படும்.
தாமரையானது வெளியே குளிர்ச்சியையும் உள்ளே சிறு வெப்பத்தையும் தக்க வைத்திருக்கும் ஒர் அற்புத மலர். அதுபோல உடலைக் குளிர்ச்சியாக்கி, மனதில் தேவையான வெம்மையை தக்கவைத்து, ஆரோக்கியத்தைச் செம்மையாக்கும்.
மனம் தெளிவடைவதால் சிந்தனையும் வளமாகும், செயல்கள் சிறப்படையும். பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி வளரும், கல்வியில் மேன்மை பெறுவார்கள்.
இந்த முத்திரை பயிற்சி முதுகு தண்டுவடத்திற்கு அதிக சக்தி கொடுக்கும். வயிற்றில் உள்ள அல்சர் மற்றும் கட்டிகள் உருவாவதை தடுக்கும்.
நரம்பு மண்டலம் பலப்பட்டு நரம்புகள் அதிக சக்தி பெரும். இரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
மன அமைதி கிடைக்கும். உடல் அழகுடன் விளங்கும். தியானத்தின் போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் உலக பந்தங்களிலிருந்து மனம் விடுபடும்.

பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக

என்றென்றும் உயிர்நேயத்துடன்….
வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை,
சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம் 
+919629188853, +917810040103
valluvarvallalar.blogspot.com      valluvarvallalar@gmil.com

Comments

Popular posts from this blog

உடல் சோர்வை போக்கும் பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை

பிருத்திவி எனப்படும் பூமி முத்திரை எல்லா   பிரச்சினைகளுக்கும்   முத்ரா   பயிற்சி   முறைகள்   நல்ல   தீர்வு தரக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிரித்வி என்ற பூமி முத்திரை பற்றி தெரிந்து கொள்வோம். சமஸ்கிருதத்தில் பிருத்வி என்ற சொல்லுக்கு பூமி என்று பொருள்படும், செய்முறை : மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம். ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம். பலன்கள் : எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அ...

சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகள்

  சைவ உணவு பழக்கம் குறைந்த கொழுப்பு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி), அமெரிக்கர்களில் 3 பேரில் 1 பேருக்கு அதிக கொழுப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. ஒரு நபரின் இரத்தத்தில் அதிகப்படியான ‘கெட்ட’ எல்.டி.எல் கொழுப்பு இருக்கும்போது, ​​அது இரத்த நாளங்களின் உட்புறத்துடன் இணைகிறது மற்றும் பிளேக் உருவாக்க கட்டமைக்கிறது. இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கு இது ஒரு பெரிய ஆபத்து காரணி. ஒரு சைவ உணவு நேரடியாக இரத்த லிப்பிட் அளவைக் குறைக்கிறது அல்லது கொழுப்பின் அளவைக் குறைக்கிறது என்று எண்ணற்ற ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உங்கள் கொழுப்பைக் குறைப்பதற்கான சிறந்த வழி, ‘கெட்ட’ வகையான கொழுப்பு-நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பைக் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது. இந்த வகையான கொழுப்புகளைக் கொண்ட உணவுகளில் வெண்ணெய், இறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்- சைவ உணவு உண்பவர்கள் தவிர்க்கும் அனைத்தும். குறைந்த இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம்- அல்லது உயர் இரத்த அழுத்தம்- என்பது உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் சக்தி நாள்பட்ட அளவில் அதிகமாக இருக்கும்போத...

உடல் சூட்டை தணித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் வருண முத்திரை

வருண முத்திரை பருவ நிலையில் மாற்றம் ஏற்படும் போது நமது உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படும் மாறுதல்களை எளிய   முத்திரைகளின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். கோடையின் தாக்கங்களை சமாளிக்கும் சில எளிய முத்திரைகளில் ஒன்று வருண முத்திரை.   இந்த வருண முத்திரையின் வழியாகவே கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களை சரிசெய்துகொள்ள முடியும். நோய் உருவாகும் வரையில்   காத்துக்கொண்டிராமல் கோடையின் துவக்கத்திலேயே இந்த முத்திரைகளைத் தொடர்ந்து செய்துவந்தால் வெயிலினால் உருவாகும் சிக்கல்கள் வராமல்   தடுத்துக்கொள்ள முடியும். பஞ்சபூதங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. ஒரு பூதத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிற   பூதங்களிலும் மாற்றங்களை உருவாக்கும். கோடை காலத்தில் நிலத்திலுள்ள நீர் குறைவதால் நிலம் வெடித்து தரிசாகி விடுகிறது. நமது உடலை   எடுத்துக் கொண்டால் கோடையின் வெப்பத்தால் உடல் சூடு அதிகரிக்கும். இந்த சூட்டைக் (நெருப்பை) குறைக்க   வியர்வை என்னும் நீர் அதிகமாக உற்பத்தியாகும். இந்த இரு மாற்றங்களுமே பல கோடைகால பிரச்சினைக...